Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

என் வாழ்க்கை??........

ஈழத்தில் பிறக்கும் குழந்தைகளின் நிலை


மனித உரிமைகள் மறந்து கிடக்கும் இலங்கை தீவினிலே மனித உரிமைக்காய் குரல் கொடுக்கும் ஈழதேசத்தில் என்றும் அழகுடன் காட்சியளிக்கும் புளியங்குளம் கிராமத்தின் ஆற்று நீரின் சலசல ஓசையும் குருவிகளின் கீச்சிடலும் ஓயாது கானம் இசைக்கும் வன்ப்பகுதியினால் சூழப்பட்ட ஓர் ஓலைக்குடிசையில் பிறந்த ஈழத் தமிழ் பெண்.........

தாயின் கருவறையின் சுகத்தினை உணராது உலகத்தின் சுதந்திரத்தை அனுபவிக்க 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் அடக்கு முறைகளினால் வைத்தியசாலைக்கு போக வழியில்லாது தவிக்கும் என் தாயின் ஏக்கம் சிறிதேனும் புரியாது இவ்உலகைப் பார்ப்பதற்கு
தாயை துன்பப்படுத்தி துடிதுடித்தேன்.துன்பம் தங்கமுடியாத தாயும் தை 26ம் திகதி என்னை பிரசவித்தாள்.

குண்டு மழைக்கும் குருதி வெள்ளத்திற்கும் மத்தியில் ஆண்டுகள் ஓடின வயது மூன்று ஆகியது.கல்வி எனும் கடலின் கரையை அடைவதற்கு என் வீட்டின் பக்கத்திலுள்ள ஆரம்ப பள்ளியிலே கல்வியை ஆரம்பித்தேன்.மழலை மாறாத எங்களின் திறமையை திறம்பட சிற்பமாக்க முனைந்த முதல் சிற்பி என் அன்பு ஆசான் இந்திராணி........

நாளை தொடரும்

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: என் வாழ்க்கை??........
வெ‌ளி‌யி‌ல் ‌வ‌ந்த ‌பிறகு‌ம் அ‌ந்த து‌ன்ப‌ம் தொட‌ர்‌கிறதே எ‌ன்பதுதா‌ன் அ‌ந்த தா‌யி‌ன் வேதனை. இ‌ப்படி உ‌ன் அட‌க்குமுறை‌க்கு ஆளான...
Re: என் வாழ்க்கை??........
Nice one, please continue writing.
கைதுறப்பு