Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

2ம் ஆண்டு நினைவு

தேசக்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்

தமிழீழ மக்களின் இன்னல்களை உலகறியச்செய்த மாமனிதர் தேசக்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு 14.12.2008 அன்று நடைபெற்றது. தமிழ்மக்களின் தலைவருக்கு பக்கபலமாக இருந்து வன்னியில் இலங்கை இராணுவம் செய்யும் கொடுமைகளை உலகறியச்செய்த உத்தமரின் நினைவுகள் என்றும் தமிழீழத்தை விட்டு அகலாது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கம் எனக் கூறப்பட்டுத் தடை செய்யப்பட்ட போதிலும்கூட அன்ரன் பாலசிங்கத்தால் லண்டனிலிருந்து கொண்டே விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் என்றும், உத்தியோக பூர்வ பேச்சாளர் என்றும் செயற்பட கூடியதாக இருந்தது என்றால் இராஜதந்திர வட்டாரத்தில் தேசக்குரல் தனக்கெனத் தேடிக்கொண்ட தனியிடமே காரணம்.

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் 1989 இல் கொழும்புக்குச் சென்று மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் பேச்சு நடாத்தி தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் ஒரு சேரப் பிரமிப்பில் ஆழ்த்தியதில் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு அளப்பரியது. தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட சொல்லெனாத்துயரங்களை கண்டு துடிதெழுந்த எம் தலைவருக்கு ஆதரவுக்குரல் கொடுத்து உலகத்தில் தமிழ் இனத்திற்கென்றொரு இடத்தை பெற்றுக்கொடுத்தவர்.

தேசக்குரலின் எளிமையான பண்பும், வாழ்வும், சுவைதோய்ந்த அவரது உரையாடல்களும், அந்த உரையாடல்களில் வட்டாரத் தமிழை அவர் சரளமாகப் பயன்படுத்தும் அந்த மண்ணின் வாசமும், என்றுமே எம்மை விட்டகலா நினைவுகளாகும். எல்லாவற்றிக்கும் அவருக்கு துணையாக இருந்து அவரை நவீன அர்த்தநாரீஸ்வரராக வலம் செய்ய வைத்த அருமைச் சகோதரி அடேல் அவர்களுக்கும் எங்கள் அன்பான ஆறுதல்கள் என்றென்றும் உரித்தாகட்டும்.

தமிழ்மக்களின் தற்போதைய ஆதங்கம் என்னவென்றால், சிங்கள இராணுவம் மேற்கொள்ளும் கொடூரமான கிளாஸ்டர் குண்டு தாக்குதல்களின் போது கூட உலகநாடுகள் மௌனமாக இருக்கும் வேளையில் எம் தேசக்குரல் எம்முடன் இருந்திருந்தால் உலகத்தை எம்பக்கம் திருப்பி சிங்கள இனவாதிகளுக்கு ஒரு படிப்பினையை கொடுத்திருப்பார். தமிழீழத்தின் சொத்துக்களான தேசக்குரல் பாலா அண்ணா மற்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணா ஆகிய இருவரையும் இழந்ததால் தமிழ்மக்கள் இன்று சோகக்கடலில் மூழ்கித் தவிக்கிறோம்.

தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது தமிழ்மக்களுக்காக அயராது உழைத்த உத்தமர் எம்மைவிட்டு பிரிந்தாலும் அவர் நினைவுகள் தடம் பதித்த தமிழீழ மண்ணும் தமிழ் மக்களும் என்றும் மறக்கமாட்ட்டார்கள்.

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: 2ம் ஆண்டு நினைவு
சிங்கம் மாதிரிதான் இருக்காரு
Re: 2ம் ஆண்டு நினைவு
தமிழ்மக்களின் சொத்துக்கள் தான் எம் தலைவர்கள்.
Re: 2ம் ஆண்டு நினைவு
nan partha muthal manithan so
கைதுறப்பு