2008ம் ஆண்டு அமெரிக்காவின் குடியரசு தேர்தலில் வெற்றி பெற்ற மக்களாட்சிக்கட்சி வேட்பாளர் தான் பராக் உசேன் ஒபாமா. அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசு தலைவர் என்ற பெருமை மட்டுமல்லாது செனட் அமைப்பின் ஜந்தாவது ஆபிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையையும் கொண்டவர்.
கென்யாவைச் சேர்ந்த பராக் ஒபாமாவுக்கும் வெள்ளை இன ஆன் டஹமுக்கும் 04.ஆகஸ்ட்.1961 அன்று ஜக்கிய அமெரிக்காவில் பிறந்தார். அன்று இருந்த வெள்ளை இன ஆதிக்கத்தின் காரணமாக ஒபாமாவின் இரண்டாவது வயதில் தாய் தந்தையர் பிரிகின்றனர். பின் தாயார் லோலோ சுட்டோரோவை மறுமணம் செய்கிறார். தனது ஆறாவது வயதிலிருந்து பத்தாவது வயது வரை ஜகார்த்தாவில் தாயுடன் வசிக்கிறார். தனது பத்தாவது வயதிலிருந்து பட்டப்படிப்பு படிக்கும்வரை அவரின் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார்.
1982ல் ஒபாமாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். ஒபாமா தந்தையை ஒரேஒரு முறை தான் பார்த்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 1995ல் சூலக புற்றுநோயால் தாயாரும் இறந்தார். இதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் ஒபாமாவின் குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு தான் ஒபாமாவின் பாட்டி இறந்தார்.
மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்து கொண்டிருக்கும் போது வாழ்க்கையில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. அது தான் மிசெல் ஒபாமாவை பார்க்கிறார். 1992ல் அவரை திருமணம் செய்கிறார். அதன் பலனாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்கள் மலியா மற்றும் சாஷா.
ஒபாமாவின் வாழ்க்கை இவ்வாறு இருக்கிறது. மேலும் ஒபாமாவின் கல்வி, அரசில கருத்துக்கள், ஒபாமா பற்றிய மக்களின் கருத்துக்கள் என்பன அறிந்து கொள்ள தொடர்ந்து என்னுடைய பக்கத்தை பாருங்கள்..
நினைவேறுகிறது…
மறுமொழிகள்