இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் இருந்து வெளியேறி 10 ஆண்டுகளின் பின்னர் இதில் சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்த சில கருத்துக்களைப் பார்க்கலாமா? நாங்கள் சொல்லவில்லை - இதோ அவர்களே தங்களது வாயால் இப்படிச் சொல்கிறார்கள்.
ஜே.என். டிக்சிட்
இலங்கைப் பிரச்சினை பற்றித் தெரிந்தவர்கள் இவரது பெயரைத் தெரியாது இருக்க முடியாது. பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரத்தில் 1985-1989 காலப்பகுதியில் கொழும்பில் இந்திய அரசின் அரசியல் ரீதியான பல முடிவுகளின் பின்னணியில் இருந்தவர். இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்.
கேள்வி:
இந்திய இராணுவத்தை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு சரியானதா?பதில்:
இந்திய இராணுவத்தை அனுப்ப நாங்கள் விரும்பினோம் என்று யார் சொன்னது? அப்படியொரு நினைப்பே எங்களிற்கு (இந்தியாவிற்கு) இருக்கவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட ஜுலை 27ம் திகதி காலையில் கூட இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும் திட்டம் இருக்கவில்லை.கேள்வி: இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் கடுமையான உயிர்ச்சேதத்தை அடைய நேர்ந்தது ஏன்??
டிக்சிட்:
உயிர்ச்சேதத்துக்கு ஒரேயொரு காரணம் இந்திய அமைதிப்படையின் முதலாவது இராணுவத்தளபதி ஹார்கிரட் சிங்கின் முட்டாள்த்தனம்தான். நல்ல பெளர்ணமி வெளிச்சத்தில் ஹெலிகொப்டர் தாக்குதல் ஒன்றை யாராவது திட்டமிடுவார்களா - அதுவும் எதிர்த்தரப்பிற்குத் தகவல் தெரிந்தபின்னர்??கேள்வி:
விடுதலைப்புலிகளின் தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி?டிக்சிட்:
நான் ஹார்கிரட் சிங்கிடம் சொன்னேன். கைது செய்யப்பட்ட 17பேரையும் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள், இலங்கை இராணுவத்தின் கைகளில் விட்டு விடாதீர்கள் என்று. அதை அவர் செய்ய மறுத்து விட்டார்.கேள்வி:
அவர் என்ன சொன்னார்?டிக்சிட்:
நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் (டிக்சிட்) சொல்ல முடியாது. நீங்கள் ஏதாவது சொல்லவேண்டுமென்றால், அதை முதலில் வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரிவிக்கட்டும். அவர்கள் இராணுவத்தலைமயகத்துக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் தென்னி்ந்தியக் கட்டளையகத்துக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் சென்னையிலுள்ள IPKF கட்டளையகத்திற்குத் தெரிவிப்பார்கள். சென்னையிலிருந்து நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லட்டும். அதன் பிறகு செய்கிறேன் என்றார் அவர்.கேள்வி:
அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?டிக்சிட்:
இவ்வளவும் நடப்பதற்கு முன்னர் 17 உயிர்களும் போய்விடும் என்றேன். கடைசியில் அப்படித்தான் நடந்தது.கேள்வி:
அதாவது இந்தியா இராணுவ ஜெனரலின் முட்டாள்த்தனத்தால் இந்த உயிர்கள் போயின. அப்படித்தானே?டிக்சிட்:
ஆம், அப்படித்தான்.கேள்வி:
உங்களது வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி தமிழர் பிரச்சினை பற்றி ஆழமான அறிவு அற்றவர் என்று சொல்லப்படுகிறதே. ஒரு தடவை உங்களிடமே கடிதம் ஒன்றைக் கொடுத்து, ஏற்கனவே இறந்துபோன தமிழ்த்தலைவர் ஒருவரிடம் கொடுத்துவிடும்படி சொன்னாராமே?! திம்புப்பேச்சுக்கள் குழம்பியதற்கு அவர்தான் முக்கிய காரணமாமே?டிக்சிட்:
அவர் தமிழர்களை முட்டார்கள் என்றார். நடப்பவற்றை இதெல்லாம் என்ன முட்டாள்த்தனம் என்றார்... கடைசியில் நாங்கள் (இந்தியர்கள்) என்ன அடிமுட்டாள்களா என்றும் கேட்டார்!மேஜர் ஜெனரல் ஹார்கிரட் சிங்
கேள்வி:
இலங்கைக்கு செல்லுமுன்னர் அங்கு எவற்றை எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் உளவுத்துறையினர் உங்களிடம் சொன்னார்களா?பதில்:
யாரும் எதுவும் சொல்லவில்லை. இலங்கை பற்றியும் எனக்குத் தெரியாது. ஹைதராபாத்தில் புத்தகக்கடை ஒன்றில் சுற்றுலா வரைபடம் (வுழரசளைவ அயி) ஒன்றை வாங்கிக்கொண்டுதான் இலங்கைக்குப் போனேன். சுற்றுலா வரைபடத்துடன் சென்ற இராணுவம் IPKF தான்.கேள்வி:
டிக்சிட்டின் நடவடிக்கைகள் பற்றி?பதில்
: ஒருமுறை அவர் என்னிடம் சொன்னார் பிரபாகரனைச் சுடுங்கள். மாத்தையாவைச் சுடுங்கள் என்று. உங்களைச் சந்திக்க அவர்கள் இரவு நேரத்தில் வரும் போது சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்றார் டிக்சிட். அவர்கள் வெள்ளைப் கொடியுடன் வருகிறார்கள். வெள்ளைக் கொடியுடன் வருபவர்களை நான் கொல்வதில்லை என்றேன்.கேள்வி:
விடுதலைப்புலிகளின் தளபதிகள் 17 பேர் தற்கொலை செய்தது பற்றி?பதில்:
அது இராஜதந்திரிகள் விட்டபிழை. இராணுவத் தலைமைப்பீடம் விட்ட பிழை. இல்லாவிட்டால் அவர்களை நான் காப்பாற்றி இருப்பேன். இந்திய இராணுவ வாகனம் ஒன்றில் 17 பேரையும் தூக்கிப்போட்டு கடத்தித்திக்கொண்டு வந்திருப்பேன். இலங்கை இராணுவம் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்கும்.இப்போது பார்த்தீர்களா, தனிப்பட்ட சிலரின் பிழையான முடிவுகள், அலட்சியம் ஆகியவற்றால் உலகின் நான்காவது பெரிய இராணுவம் இலங்கையில் வைத்து மூக்கில் ஓங்கிக் குத்து வாங்கியது.
சரி, இந்த தொடருக்கு இப்போது அவசியம் என்ன??
அதையும் சொல்லி விடலாம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீர்வு ஒன்று இன்றைய சூழ்நிலையில் ஏற்பட வேண்டுமென்றால் அதற்கு இந்தியத் தலையீடு தேவை. இந்தியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எந்தவொரு பகையும் கிடையாது. எல்லாமே இடையே ஒருசிலர் செய்த தவறால் ஏற்பட்ட குழப்பம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் என்று கோருவதன் காரணம் இலங்கைத் தமிழருக்கும் இந்தியாவுக்குமிடையிலுள்ள பூர்வீகத் தொடர்பு மாத்திரமல்ல - உங்கள் பிரதிநிதிகள் சிலரால் பிரச்சினை இந்தளவுக்கு வந்திருக்கிறது. அதை தீர்த்து வைப்பது உங்கள் தார்மீகப் பொறுப்பு.
நன்றி
tamilsfront
நினைவேறுகிறது…
மறுமொழிகள்