கடந்த ஞாயிற்று கிழமை ஒரு விசேச நிகழ்வுக்காக உறவினர் வீட்டிற்கு சென்றவருக்கு நிகழ்வில் பங்கு கொள்ள முடியாமல் போனதற்கு காரண கர்த்தாவாக திகழ்பவர் தான் பேருந்து நடத்துனர். இரவு 8 மணி தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. "55 வயதிருக்கும் ஒரு பெண் பேருந்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து விட்டார்" என்று.
தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அவரின் கை பையில் கடதாசியில் எழுதி வைத்திருந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டிருக்கிறார்களே தவிர அவரின் தொலைபேசியில் உள்ள இலக்கங்களில் எதற்குமே தொடர்பு கொள்ள வில்லை. தற்சமயமாக அவர்கள் தொடர்பு கொண்ட நபரும் அந்த விசேசத்திற்கு வந்திருந்ததால் அவர் பேசும் போது கேட்டு கொண்டு பக்கத்தில் இருந்தவர்கள் தான் அவராக இருக்கலாம் என ஊகித்து அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அவரின் தொலைபேசியில் நடத்துனர் பதிலளிக்கிறார்.
திகைத்துப் போன உறவினர்கள் எங்கிருக்கிறீர்கள் எனக்கேட்டால் "வைத்தியசாலையில்" என்றதும் வாகனத்தில் ஓடுகிறார்கள். அங்கு போய் பார்த்த பொழுது 2 போக்குவரத்து காவலர்களும் நடத்துனரும் வைத்தியரும் சூழ மயங்கிய நிலையில் நடுவில் படுக்க வைக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்று நடத்துனரிடம் வினாவிய போது பேருந்திலிருந்து இறங்கி போகும் போது விழுந்திட்டாங்கள் என்று கூறினார்கள். அவ்வாறு கூறியதும் நம்பிய உறவினர்கள் அவருக்கு மருந்து உதவி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது குறுக்கிட்ட நடத்துனர் பேருந்து இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தான் அவசரமாக கிளம்ப வேண்டும் எனவும் கூறி பதறிப்போன உறவுகளிடம் அவர் வைத்திருந்த கைப்பையை நடத்துனர் கொடுத்து எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளுங்கள். அத்துடன் ஆபரணங்களையும் சரிபாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதை பார்த்த உறவுகள் அவரின் நம்பிக்கை தன்மையை உணர்ந்து கைப்பையை சோதனை செய்யாமலேயே நன்றி சொல்லி அனுப்பி வைத்தார்கள். பாதிக்கப்பட்டவரை வீட்டிற்கு கொண்டு வந்து அடுத்த நாள் தான் அவருக்கு சுயநினைவு திரும்பியது. "அப்போது தான் என்ன நடந்தது?"என்று உறவுகள் கேட்ட போது தான் இறங்குவதற்கு முன்னரே நடத்துனர் விசில் ஊதியதால் ஓட்டுனர் பேருந்தை எடுத்ததாகவும் அதனால் தான் செய்வதறியாது காலை எடுத்து வைத்ததாகவும் அதன் பிறகு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும் அவர் சொன்னார்.
பேருந்து நடத்துனர்களின் இந்த மாதிரியான கவலையீனங்களால் இப்படி எத்தனை பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருப்பார்கள்?.. பயணிகளின் அசௌகரியங்களை நீக்க பயணிகளை பாதுகாக்க என்னதான் வழி?...
நினைவேறுகிறது…
மறுமொழிகள்