கருத்தடை சிகிச்சை
தமிழச்சியா! தண்டனை
தமிழீழ மண்ணதனிலே
தமிழா ஏன் பிறந்தாய்?
நீதியா?இக் கேள்வி நீதியானதா?
தமிழனாய் பிறந்து விட்டாய்
தண்டனைதான் உன் வேலை
தரணியிலே சிறை தான் உன் வீடு.
நிர்ப்பந்திக்கப் பட்டதுவோ!- உலகிலே
நீதியில்லாமல் நீ சாக!
நீதவானே நீ எங்கே?..
பிறக்காதே தமிழனாய் பிறக்காதே!
பிறந்தால் சாப்பாடு கொத்தணி குண்டுதான்
பிறப்பவனே தெரிந்துகொள்.
தமிழச்சியே,
தரணியிலே தமிழனவன் பிரசவிக்க
தாராள கற்பமதை தங்கிட வைக்கும்
தங்கமான கரு உனக்கினி சொந்தமில்லை.
ஏன்?......
கருத்தடை சிகிச்சை தான்
கண்கட்டி நடந்து விட்டதே!
உணர்ச்சி மிக்க தமிழர்களை
உருவாக்கிய தமிழச்சியே! ஏன்?
உனக்கு கற்பம்?..
தமிழச்சி உன் கரு இருந்துவிட்டால்
தமிழன் அவன் பிறந்திடுவான்
தமிழீழம் தான் தீர்வு என்பான்.
இனி தமிழன் என்று ஒரு இனம்
இலங்கையிலே பிறக்குமா?
இனவாதியே, அச்சப் படுகிறாயா?..
இது போதும் நாம் ஜெயிக்க.