இலங்கை பிரச்சனை பற்றி எரியும் நிலையில் தணிக்கைக் குழுவும் தனது பங்குக்கு விதிகளை இறுக்கியுள்ளது.
குறும் படம், முழு நீளப்படம் எதுவாக இருந்தாலும் சில வார்த்தைகளுக்கு கட்டாய தடை விதித்துள்ளதாம் தணிக்கைக் குழு. புலி, புரட்சி, பிரபாகரன், தனி நாடு, தனி ஈழம் ஆகியவை தடைக்கான விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
ஈழம் பிக்சர்ஸ் சார்பில் தனது, கைல காசு வாயில தோசை படத்தை எடுத்து வந்த மன்சூர் அலிகான் ஈழம் என்பதை ராஜ் கென்னடி பிலிம்ஸ் என்று மாற்றி வைத்துள்ளார். தணிக்கைக் குழுவின் தடையே இதற்கு காரணம் என்கிறார்கள்.
நினைவேறுகிறது…