Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

கற்பழிப்பு

தமிழ் கற்பு எங்கே?

க்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களாகிய எங்களது கற்புக்களும் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு காலத்தில் உலக இராணுவத்திலிருந்து இலங்கை இராணுவத்தை உலகம் நிராகரித்ததே இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்முறை காரணமாகத்தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை.
queen of jordan,desi stories,good morning mails,jagdish tytler,madurai meenakshi temple
அப்படியான ஒரு இராணுவத்தைக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பமைச்சரான கோத்தபாய ராஜபக்ச என்ற காமம் பிடிச்சவனும் பெண் உறவுகளுடன் பிறக்காத ஒரு கொடூர பிறப்புமாகியவன் கடந்த மாதம் சோர்வடைந்த இராணுவத்தை உசார்படுத்துவதற்காக கூறியிருக்கிறார்"தமிழ் பெண்களின் உடல்கள் இராணுவத்திற்கு இரையாகவும் ஆண்கள் இந்து சமுத்திரத்திற்கு இரத்தமாகவும் மாறவேண்டும்" என்று. உண்மையில் ஒரு நாட்டின் பற்றில் தான் இலங்கை இராணுவம் போராடுகிறதா? அல்லது பெண்களின் கற்பை பறிப்பதற்காக போராடுகிறதா?

எம் உறவுகளின் கற்பை பறிப்பவனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம் எங்களை உலகம் பயங்கரவாதி என்கிறது. கற்பை பறிக்க போராடுகிறவனை அரசாங்கம் என்கிறது. இந்த உலகம் நீதியானது தானா? இப்படியான உலகில் நீதியாக வாழமுடியுமா? செய்திகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போது மனசு பதறுகிறது. இதை எல்லாம் இந்த உலகு கேட்காதா? ஆக இந்தியாக்கு தெரிஞ்சதெல்லாம் ராஜிவ் கொலை. அமெரிக்காவுக்கு தெரிஞ்சது மக்களை பாதுகாப்பான இடத்துக்கு விடுதலைப் புலிகள் விடவில்லை என்பது. முதலில் வந்த மக்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? அவர்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்தீர்களா?pgcet 2009,hanuman jayanti 2009,hanuman pictures,panguni uthiram,speed racer games
எங்கே, எப்படி நீதியின் மேல் பிழை கண்டு பிடிக்கலாம் என்று உலகம் எதிர்பார்த்து விதண்டாவாதம் தான் பேசிக்கொண்டிருக்கிறது. தினமும் எமது உறவுகள் கற்பழிக்கப்பட்டதாக செய்திகள் வருகிறதே இதையெல்லாம் இந்த உலகு படிக்காதா? ஏன் அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. கற்பு என்பது செல்லாக் காசாகிவிட்டதா? என்ன தான் காரணம்? தெரிந்தவர்கள் விடை கொடுங்கள்.

காலையில் ஒரு செய்தி பத்துமாதம் சுமந்து பிரசவித்த தாய் முன்னே பதின்னான்கு வயது சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ளாள். தமிழ் தாயாக இந்த உலகத்தில் பிறந்ததற்கான தண்டனை தன் பிள்ளையை கண்முன்னே கற்பழிப்பதை பார்ப்பதா? பதின்னான்கு வயது பிள்ளையை கற்பழிப்பது சிறுவர் துஸ்பிரயோகம் இல்லையா? சிறுவர் பாதுகாப்பு அமைப்பு என்று உலகில் ஏதாச்சும் உண்டா?

கடந்தவாரம் ஒரு செய்தி அதில் கிளிநொச்சி மருத்துவமனையின் மேல் மாடியில் இரவு நேரங்களில் ஒரே பெண்களின் அழுகை சத்தம் கேட்கிறதாம். அதை கேட்டவுடன் ஏன் நாமெல்லாம் உலகில் வாழவேண்டும். இதையெல்லாம் பார்த்து கொண்டு எப்படி வாழமுடியும்? எப்படி இந்த உலகம் வாழுகிறது? ஏன் நமக்கு இப்படியான கொடுமைகள் எல்லாம் தமிழன் என்றதாலா? உண்மையில் தமிழன் என்பதால் அல்ல. தமிழன் எல்லாவிதத்திலும் வளர்ச்சி கண்ட ஒரு இனமாக திகழ்ந்ததால் வெறுப்பு கொண்ட உலகம் இன்று எம்மை எல்லா விதத்திலும் நசுக்குகிறது. இப்படியான உலகில் நாம் எப்படி எல்லாம் வாழவேண்டும்? எமது உறவுகளின் கற்புக்காக ஆயுதம் ஏந்தியது தவறா? உலகமே கண் திறந்து பதில் சொல்!


குறிச்சொற்கள்:
கைதுறப்பு