![]()
என்ன பாவம் செய்தோமோ
ஏழ்மையான இவ் உலகினிலே!
கருவில் இருக்கும் குழந்தைதனை
கதிர்வீசி பார்ப்பார்கள் மருத்துவர்கள் - எறி
கணைவீசி பார்க்கிறது இலங்கை அரசு.pgcet 2009,hanuman jayanti 2009,hanuman pictures,panguni uthiram,speed racer games
பத்துமாதம் சுமந்து பெறப்போகும் சிசுவை
பல கனவுகளோடு பார்க்க் துடித்த தாய்
பாதிப் பிள்ளை வெளிவந்த பரிதாபமான நிலையிலே
பட்டினியில் வாடுகிறாள் பாரினிலே!
நாயை சுடுவதற்கு நீதிமன்றம் போகும்
நாடாம் இந்தியா - தமிழ் மக்களை
நாதியில்லாமல் கொண்றொழிக்க
நாட்டம் தான் காட்டுவதேன்!
தீர்வில்லா தீர்மானத்தை
தீந்தமிழாக பாடும் பாரத தேசமே!
தீர்வுதனை சரியாக எடுக்காதது தான் ஏனோ!
தீர்வு தான் இல்லாமல் தண்டனை தான் எதற்கு!
உற்றார் உறவுகளுடன் கும்பலாக
உறங்கிய நாம் உருக்குலைந்து போவதற்கு
உடன்பிறப்பே நீ காரணம் ஆகலாமா?queen of jordan,desi stories,good morning mails,jagdish tytler,madurai meenakshi temple
வயிற்றிலிருக்கும் பிள்ளையை
வயிற்றோடு எடுக்கும்
வன்கொடுமை கும்பலுக்கு
வக்காளத்து வாங்கும் உலகமே!
வந்திங்கு பார் எம் அவலம் தான் என்னவென்று.
படுத்துறங்க பாய் இல்லை!
பார்ப்பதற்கு உறவில்லை!
பண்பாடும் எறிகணைக்குள்
பம்பரமாடும் மக்களாய் தமிழீழ மக்கள்
பாரினிலே தவிக்கிறோம்...- உலகமே
பார்ப்பாயா ஒரு கணம்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்