கடந்த சில நாட்களாக என் மனதை வருத்திக்கொண்டிருக்கும் ஒரு கொடிய சம்பவம் என்னவென்றால், அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்தின் தாக்கம். யாரையும் புண்படுத்தவோ சுட்டிக்காட்டவோ எழுதவில்லை பொதுவான கருத்து. ஒருமாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் அதே போல உண்மையாக மனிதர்களாக இருந்தால் மனித பண்பு இருந்தால் தாம் செய்த பிழையை உணர்ந்து மீண்டும் அந்த பிழையை விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். என்னதான் படித்து பட்டம் பெற்றாலும் மனிதனிற்குள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தால் மட்டுமே அவர்களை மனிதர்களிற்கான பட்டியலில் சேர்க்க முடியும்.games, free games, online games, downloadable games, puzzle games, sport games, google games, gaming games, free web games
எது எப்படியோ, இந்த கட்டுரையை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் என்னதான் படித்தாலும் என்னதான் பதவில இருந்தாலும் என்ன தான் பணக்காரனாக இருந்தாலும் பூமி உருண்டையானது போலவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையும். சுற்றிக்கொண்டே இருக்கும் எல்லோரும் எப்போதாவது ஒரு அடிமட்ட வாழ்க்கையை வாழ நேரும். இல்லை என்றாலும் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்கள் அடுத்த சந்ததியை தாக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. எனவே, நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் இப்படியான ஒரு சந்தர்ப்பம் எனக்கு வந்தால்! எப்படி இருக்கும்? என்று யோசித்து செய்ய பழகிக்கொள்ளுங்கள்.
சமீபத்தில் ஒரு வீட்டிலுள்ள வேலைக்காரரை வீட்டுக்கு சொந்தக்காரர்கள் அசிட் எனும் திரவம் கொண்டு வீட்டை துப்பரவு செய்வதற்கு கட்டளை இட்டிருக்கிறார்கள். அதற்கு தூரிகை வாங்கிக்கொடுக்க மறுத்தவர்கள் நாரினால் கைகளால் தேய்க்க உத்தரவிட்டிருக்கிறார்கள். அசிட் பட்டால் என்ன ஆகும் என்பதை பாடசாலையில் சொல்லி கொடுக்கவில்லை போல் உத்தரவிட்ட வீட்டுக்காரருக்கு. என் மனதில் என்ன தோண்றியது என்றால் அந்த வீட்டுக்காரரை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் என்னிடம் இருந்திருந்தால் மீண்டும் அவரை கொண்டு அந்த வீட்டை தேய்த்திருப்பேன்.wallpapers, hot wallpapers, Photos, bollywood actresses Photos, hot wallpaper, download wallpaper, actresses Photos, free Pictures, bollywood wallpapers
என் எண்ணம் சரியோ தவறோ எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை யாரும் யாரையும் கீழ்த்தரமாக நினைக்க கூடாது. நாம் எல்லோரும் மனிதர்கள் என்றே சிந்திக்கப்பழகிக்கொள்ள வேண்டும். அதாவது ஒருவர் எல்லோரிடமும் பணிவாக பழகுகிறார் என்பதற்காக அவரை அடிமைப்படுத்த நினைக்க கூடாது. அது வந்து மனிதர்கள் சக மனிதர்களுக்கு கொடுக்கும் மரியாதையே தவிர அவரை ஒரு ராஜாவாகவோ ராணியாகவோ நினைத்து பணிவிடை செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் மனிதர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், மனித உருவத்தில் உள்ளனர் என்பதே என் கண்களுக்கு தெரியும் காட்சி. அந்த காட்சிப் பொருளை மட்டும் மையமாக கொண்டு அவர்களுடன் பணிவாக நடந்ததை எண்ணி இப்போது வெட்கப்படுகிறேன்.
எல்லோரிடம் பணிவாக நடக்கவேண்டும் எல்லோரிடமும் நன்றாக பழகவேண்டும் யார் மனதையும் வருத்தப்பட வைக்க கூடாது என்று இருக்கும் என் குறிக்கோள் சற்று மாற்றமடைந்து யார் யார் மனிதர்களிற்குரிய பகுத்தறிவை கொண்டிருக்கிறார்களோ அவர்களை இனங்கண்டு அவர்களுடன் மட்டும் என் குறிக்கோளுடன் நடந்து கொள்ளவேண்டும் என தற்போது தீர்மானித்துள்ளேன். பொதுவாகவே நிறைய மக்களுடன் அன்பாக பழகும் நான் நீண்ட நாளைக்கு அந்த நிறையப்பேருடனும் அன்பாக இருப்பதில்லை என்பது எனக்கு தெரிந்த உண்மை. cricket, cricket bats, cricket match, cricket team, cricket scores, cricket test match, cricket matches, cricket news, sports, match, live scores
ஏனெனில் சிலரின் சுயநலமான சிந்தனை, மற்றவர்களை மதிக்காமை, ஏழைகளை இகழுதல், தாங்கள் நல்ல பெயர் பெறுவதற்காக மற்றவர்களை ஏமாற்றும் வஞ்சகர்கர்கள் என பலதரப்பட்டவர்கள் அதற்குள் அடங்குவதால் அதனை இனங்கண்டு என் குறிக்கோளுடன் ஒத்துப்போகும் ஒரிரு சிலரே என் வாழ்க்கையில் நிலைப்பார்கள். அதனால் எனக்கு கைவிட்டு எண்ணக்கூடிய சிலரே உறவுகளாக உள்ளனர். பலருடன் நட்புக்கொள்வதைவிட சிலரது நட்பு வாழ்கையின் முடிவு மட்டும் தொடர்ந்தால் நல்லதல்லவா. எனவே, மற்றவர்களில் உங்கள் ஆதிக்கத்தை செலுத்தாதீர்கள். முடிந்தவரை மனிதர்களாக வாழுவதற்கு பழகிக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் முயற்சி செய்யுங்கள்.
நினைவேறுகிறது…