Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

வீரவணக்கம்

களம் கண்ட கடவுள்களிற்கு

















நீதி வழியில் நின்று - உயிர்
நீத்த நீதவானே! - எம் உயிர் காக்க
நீதவானாய், அரசியல் துறை பொறுப்பாளராய்
நீங்காத உருவெடுத்த கடவுளே!- நடேசா
நீங்காது உம் நினைவுகள்
தமிழர் நாம் இருக்கும் வரை.

சமாதானம் பேசி வெள்ளைப்புறா
சாமர்த்தியமாய் பறப்பதற்கு
சாட்சிகளை தருவித்து
சாட்சியமின்றி போனாலும் - புலித்தேவன் நாமம்
சாகாது தரணியிலே.

துரோகி தனை கண்டு
துவளாத நெஞ்சத்தோடு - தலைவன்
தூதுவனாக மட்டக்களப்பிலிருந்து
துடித்தோடி வன்னி சென்ற
தூங்கா தலைவரின் அன்பு தம்பியே ரமேஸ் - என் அன்பு மாமாவே
துடி துடித்தோம் நீங்கள் எங்குள்ளீர்கள் என அறிய
துன்பத்தோடு விடுதலையின்
தூண்டுதலையும் தந்து சென்றீர்கள்
துவண்டு வரும் தமிழீழம் உங்கள்
தூக்கமில்லா கல்லறைக்கு

வன்னியின் வளமதனை
வஞ்சிக்காது பயன்படுத்தி
வான்படை கொண்டு தமிழன் வீரமதை
வானுயர பறக்கவிட்ட சாள்ஸ்
வாடாது அண்ணா உங்கள் நினைவுகள்
வளர்த்திடுவோம் வன்னிதனை
வணங்கிடுவோம் உங்கள் சாதனையை.

தானை தலைவன் அவன்
தாழ் பணிந்து - தமிழ் தாயின்
தமிழீழ கனவுக்காய்
தன்னுயிரை எங்களுக்காய்
தானமாக வழங்கி சென்ற
தர்ம தூதுவர்களே! - நாம்
தலைநிமிர்ந்து வாழ்வது - உங்கள்
தலைகள் தனை கொண்டே.

மாறாத மனமும்
மறுப்பில்லா குணமும்
மனம் தனிலே ஏந்தி
மறவர்களாகிய உங்கள்
மானம் தனை காத்திடுவோம்
மன்னிப்பு தனை எமக்களித்து
மனித பண்போடு சென்றதற்கு
மாவீரர்களாகிய உங்கள் பாதங்களில்
மலர்களாக்குவோம் தமிழீழம் எனும்
மரணிக்காத தாயவளை.
குறிச்சொற்கள்:
கைதுறப்பு