புலிகளின் தலைமையை அழித்து விட்டதாகக்
கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசே
உனக்கு ஒன்று தெரியுமா?
பிழையைத் தட்டிக்கேட்கும் ஒவ்வொருவனும் பிரபாகரன் தான்
பொய்யை ஒழிக்கும் ஒவ்வொருவனும் பொட்டம்மான் தான்
தீமையை எதிர்க்கும் ஒவ்வொருவனும் தீபன் தான்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் ஒவ்வொருவனும் சூசை தான்
தமிழை நேசிக்கும் ஒவ்வொருவனும் தமிழ்ச்செல்வன் தான்
நல்லதை நினைக்கும் ஒவ்வொருவனும் நடேசன் தான்
இப்போது சொல்
புலிகளின் தலைமையை அழிக்க
உன்னால் கனவில் கூட முடியுமா?
நினைவேறுகிறது…