Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கலைஞருக்கு


கலைஞர் செய்த சாதனைகளை கவியாக வடி்ப்பவர்கள் இந்த சாதனையையும் தயவு செய்து சேர்ந்திடுங்கள். உலகில் அவர் புரிந்த மிகப்பெரும் சாதனை இது.

ஈழத்து உறவுகளை
இரக்கமின்றி அழிப்பதற்கு
வாழ்த்தோடு ஆதரவையும்
வளமுடன் வாரிவழங்கிய எம்
தமிழின முதல்வரே!
வாழ்விழந்து நாம் போக - நீர்
வாழ்ந்திடுவீர் பல்லாண்டு
வாழ்த்துகிறோம் குருதி படிந்த கைகளால்....

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அருமையான வாழ்த்து....
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
super
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமது மக்களையே பகடைக்காய்களாக வைத்திருந்தவர்கள் மத்தியில்... தம்மால் முடிந்தவரை போராடி இன்னமும் போராடிக் கொண்டிருக்கும்... ஒப்பற்ற தலைவரை அவமானப்படுத்தும் எந்த செயலையும் ஏற்க முடியாத மானமுள்ள தமிழன்... யார் குரல் கொடுத்தாலும் அது ஆறுதல் குரலா அல்லது வஞ்சகக் குரலா என்று அறிய முடியாத அப்பாவிகளுக்காக வருந்தும்... தமிழகத் தமிழன்....
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
‌நீ‌ங்க சொ‌ல்றது உ‌ண்மைதா‌ன். ‌சில அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் பகடை‌க்காயாக வை‌த்‌தா‌ர்க‌ள். ஆனா‌ல் உ‌ங்க‌ள் தலைவ‌ர் ப‌லிகடாவாகவே வை‌த்து‌வி‌ட்டா‌ர் த‌மிழ‌ர்க‌ளை, உ‌ங்களது நெ‌ஞ்‌சி‌ல் கை வை‌த்து சொ‌ல்லு‌ங்க‌ள்... உ‌ங்க‌ள் தலைவரு‌ம், அவ‌ர் ஆத‌ரி‌க்கு‌ம் சோ‌னியாவு‌ம் ‌நினை‌த்‌திரு‌ந்தா‌ல் த‌மிழ‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்‌றி இரு‌க்க முடியாதா? முடி‌ந்‌திரு‌க்காது எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கூ‌றினா‌ல்.. பாவ‌ம் ‌நீ‌ங்க‌ள் உலக‌ம் தெ‌ரியாத அ‌ப்பா‌வி.
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
யார் சொல்லியும் கேட்காத.... ஏன் ஒபாமாவே சொல்லியும் கேட்காத பக்சே.... எம் தலைவர் என்ன கடவுளே சொல்லியிருந்தாலும் நிறுத்தியிருப்பாரோ... உம் கோபம் எங்கள் தலைவர் மீதா இல்லை ராஜபக்சே மீதா... மீண்டும் உம் கருத்து தமிழக அரசியல் வாதிகளின் மனநிலையைவிட குறுகலாக மாறிவிட்டதே.... ஏன்... உங்கள் கூற்றைப் பார்த்தால் ஈழத்தந்தை செல், அவர் புதல்வர் போன்றோர் எம் தலைவர் மீது பற்று கொண்டது எல்லாம் வேஷமா... அவரது அரசியல் அனுபவத்தில் 10 சதவீதம் கூட நமது வயது இல்லை... அவராலேயே இதைத் தடுக்க முடியவில்லையே என்று வருத்தம் அடையலாமே தவிர... ஏதோ அவரே போரை முன்னின்று நடத்தியது போலக் கூறுவது ஏற்க இயலாதது... இலங்கைத் தளபதி அளித்த அறிக்கையில் ஆயுதம் மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா மறுத்ததால் தான் நாங்கள் சீனா போன்ற நாடுகளின் உதவியை நாடினோம் என்றால்.... நமக்குத் தேவையான பதில் கிடைக்காத பட்சத்தில் அனைவரும் தவறு இழைத்ததாகக் கருதுவது என்பது.... ஏற்க முடியாதது... மன்னிக்கவும்... யாரும் யாரையும் அழிக்க முடியாது... அவரவர் அவர்களின் பலனை கண்டிப்பாக அடைவர்...
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
போரை நிறுத்த சொல்ல சொல்லி சொல்லவில்லை.. போருக்கு உதவாதீர்கள் என்று தான் சொன்னார்கள்.. ஈழதந்தை செல்வா இல்லை எம் தேசியத்தலைவர் கூட விசுவாசமாகத்தான் இருந்தார் எம் தமிழினழிப்புக்கு ஆதரவு கொடுக்காதவரை...அதே இராணுபத்தளபதி தான் தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று கூறினார்.. கருணாநிதி எனது நண்பர் என்று கூறினார். இவ்வளவு ஏன் இந்திய முன்னால் இராணுவ தளபதி அதாவது இந்திய அமைதிகாக்கும் படையின் கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறியிருக்கிறார் இலங்கையில் மக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து புரியவில்லையா இந்தியாவின் பங்களிப்பு! அந்த அரசு மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது யார்?இவர்கள் ஆதரவு கொடுக்காமல் அந்த ஆட்சி நிலைத்திருக்குமா?போரை நிறுத்த சொல்ல சொல்லி சொல்லவில்லை.. போருக்கு உதவாதீர்கள் என்று தான் சொன்னார்கள்.. ஈழதந்தை செல்வா இல்லை எம் தேசியத்தலைவர் கூட விசுவாசமாகத்தான் இருந்தார் எம் தமிழினழிப்புக்கு ஆதரவு கொடுக்காதவரை...அதே இராணுபத்தளபதி தான் தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று கூறினார்.. கருணாநிதி எனது நண்பர் என்று கூறினார். இவ்வளவு ஏன் இந்திய முன்னால் இராணுவ தளபதி அதாவது இந்திய அமைதிகாக்கும் படையின் கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறியிருக்கிறார் இலங்கையில் மக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து புரியவில்லையா இந்தியாவின் பங்களிப்பு! அந்த அரசு மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது யார்?இவர்கள் ஆதரவு கொடுக்காமல் அந்த ஆட்சி நிலைத்திருக்குமா?
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீங்கள் கூறுவது உண்மையெனில் இந்திய மக்கள் அரசை தண்டித்திருக்க வேண்டுமல்லவா மாறாக மீண்டும் ஆட்சியில் அல்லவா அமர்த்திருக்கிறார்கள்...!!! அப்படி என்றால் இந்திய மக்கள் அனைவரும் அப்பாவிகளா... ஒரு கருத்து என்பது அனைவருக்கும் ஒன்றுபடுவதில்லை... போருக்கு ஆதரவு அளிக்கும்வரை எனபது அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி சட்டசபையில் தீர்மானம் நடத்தி, கொட்டும் மழையில் மனித சங்கிலி நடத்தி, மாற்றுக் கருத்து கொண்ட ஒரு தலைவி திடீரென தேர்தலுக்காக ஆதரவுக்கரம் நீட்டும் வரையிலா... ஏன் புயலென கிளம்பிய அந்த திடீர் சூராவளி வலுவிழந்தது எதனால்... இன்று துரோகியான எம் தலைவர் அன்று மூன்றுமுறை ஆட்சியிழந்தது இதே ஈழத் தமிழர்களுக்காகத் தான் என்பதை நாங்கள் ஒருபோதும் மறந்ததில்லை... போரைத் தடுக்க இயலாமல்.. அதற்காக இங்கு சிறை சென்ற எம் உடன்பிறப்புகள் எத்தனைபேர் தெரியுமா??? ஏன் திடீரென வந்த புயல் இன்று ஓய்வெடுக்கிறதே.... எம் தலைவரை வாழ்த்த எமக்கு வயதில்லை... அவரை வணங்கும் உண்மைத் தொண்டன்... மீண்டும் என் தலைவரை அனைவரும் ஏன் தாங்களே கண்டிப்பாக போற்றும் காலம் வரும்... அது வரையில் காத்திருக்கும் இந்தக் கழக உடன்பிறப்பு........ மீண்டும் தங்களுடன் வாதிடத் தயாரில்லை....!!! வீண்விவாதங்களும் நல்லதல்ல என்பதனால்... உமது குறிக்கோள் நன்று (வாழ்த்து)... பொருள் ஏற்பில்லை....
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தங்களுக்கு ஏற்ற பதில் இல்லை என்பதற்காக ஒருவரைக் குறைகூறி ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை... என் தலைவரை நீங்கள் பாவி என்றபோது, நான் அப்பாவியாக இருப்பதில் தவறொன்றுமில்லை... எம் தலைவர் தமக்காக இலட்சம் தமிழர்களை காவு வாங்கும் கடவுள் இல்லை.... 86 வயதிலும் தமிழனுக்காக உழைக்கும் தலைவன்.... தனது 86 வயதிலும் ஓய்வை அறியா ஒப்பற்ற தலைவனுக்காக நான் அப்பாவியாக இருப்பதில் தவறொன்றுமில்லை என்றே எண்ணுகிறேன்....
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தங்களுக்கு ஏற்ற பதில் இல்லை என்பதற்காக ஒருவரைக் குறைகூறி ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை... என் தலைவரை நீங்கள் பாவி என்றபோது, நான் அப்பாவியாக இருப்பதில் தவறொன்றுமில்லை... எம் தலைவர் தமக்காக இலட்சம் தமிழர்களை காவு வாங்கும் கடவுள் இல்லை.... 86 வயதிலும் தமிழனுக்காக உழைக்கும் தலைவன்.... தனது 86 வயதிலும் ஓய்வை அறியா ஒப்பற்ற தலைவனுக்காக நான் அப்பாவியாக இருப்பதில் தவறொன்றுமில்லை என்றே எண்ணுகிறேன்....
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மன்னிக்கணும் உங்கள் தலைவர் தமிழர்களுக்காக உழைப்பதற்காக பதவியில் இருந்தாரா! தன் புதல்வர்களுக்கு பதவி கொடுப்பதற்காக பதவியில் இருந்தாரா!தான் பதவில் இருக்கும்போதே தன் மகனுக்கு பதவி கொடுத்தால் தான் முதலமைச்சர் ஆவார் எனும் உங்கள் தலைவரின் அறிவை கூட ஏற்றுக்கொள்ளாத அப்பாவியாக இருக்கிறீர்களே! எமது தேசிய தலைவர் கடவுள் தான் அதை நாங்கள் ஏற்பதை போல நீங்களும் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் கோடி..
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அவர்தம் புதல்வர்கள்... இந்த அரியணைகளில் இன்று வந்தவுடன் ஏறவில்லை.... கழகத்துக்காகவே இத்தனை வருடங்கள் உழைத்து, தலைவரின் 80 வயதுகளுக்கு மேல்தான் அதுவும் அவர்கள் 60 களை நெருங்கும் வயதில்தான் பெற்றுள்ளனர்.. இன்று கட்சி ஆரம்பித்து நாளை முதல்வராகும் எண்ணத்தில் அவர்கள் கட்சியில் சேர்ந்து உழைக்கவில்லை.. அவர்களும் கடந்த 30 வருடங்களாக அரசியலில் இருந்துதான் இந்தப் பதவிகளுக்கு வந்துள்ளனர்... அதனால் அவர்களின் புதல்வர்களை வாழவைப்பதற்காக அவர் பதவிகளை வழங்கவில்லை... அவர்கள் பதவியில் இருந்துதான் பிழைக்க வேண்டியதும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.. அவர்கள் எம் தலைவரின் வழி வந்தவர்கள்... எங்கள் உடன் பிறப்புக்களின் வேண்டுகோளினாலேயே பதவிகளை வகிக்கிறார்கள்... தயவுசெய்து வரலாறுகளைத் தெரிந்து எழுதவும்.. தனது கோபத்தை எவ்வழியிலும் காண்பிக்கலாம் என்பதற்காக கண்டதையும் எழுதுவதை நிறுத்தவும்...
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Stupid Kavithai, do you know the history of Srilankan issue. if you know you don't blame kalaignar. Pls do not post this type of article hereafter.
Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Stupid Kavithai, do you know the history of Srilankan issue. if you know you don't blame kalaignar. Pls do not post this type of article hereafter.
கைதுறப்பு