![]()
இனமே இனமே தமிழினமே!
திரள்வோம் திரள்வோம் படை திரள்வோம்.
தன்மானம் எனும் ஆயுதம் தாங்கிய
தனி இனமே தமிழினமே!
உடுக்க உடையின்றி உண்ண உணவின்றி
படுக்க இடமின்றி கதைக்க உறவின்றி
உலகின் பார்வையிலே தவிக்கும் ஒரு இனமே! - உலகின்
தொன்மை பொருந்திய தமிழினமே!
எறிகணைகள் ஏறிவிளையாட - பாரினிலே
ஏந்த உறவுகள் ஏதுமின்றி
ஏங்கி தவித்த இனமே எம் தமிழினமே!
ஏவிவிட்டு வேடிக்கை பார்த்ததும் எம்மினமே!
அன்பு எனும் அமுதசுரபி குடிகொண்டிருக்கும் இனமே!
அளவில்லா மனமதனை தாங்கியிருக்கும் தமிழினமே!
மதியிருந்தும் மாற்றான் மதியதனை தாங்குவது தான் ஏனோ!
மதிப்பிற்குரிய தமிழினத்தை மதிப்பற்று விற்பது தான்
மான்புமிகு தமிழின துரோகிகளின் மதியற்ற கடமையா?
ஒரு தாய் பிள்ளைகள் போல்
இனம் ஒன்று வாழ்ந்ததென்றால் தமிழினமே நாம் தானே!
கட்டுக்கோப்புடன் ஒழுக்கத்தையும்
கண்ணின் மணிகளாக தாங்கிய இனமே
கணக்கின்றி நாம் விதையானோம் தமிழின விடுதலைக்காய்...
முற்கம்பி வேலிக்குள் மந்தையை
முடக்கி வைத்ததற்கு மந்தைகள் தந்த பரிசு தானோ மெனிக்பாம்..
மறந்தும் விடமாட்டோம் மீண்டும் ஒரு தவறை.
சர்வதேச சதிவலைக்குள் மீனாக பிடியுண்டு
சச்சைக்குள் சிக்கி சாக்கடையும் ஆகிவிட்டோம்.
சந்தித்த துன்பங்கள் சாதிக்கும் படிக்கட்டுக்கள்
சரித்திரத்தின் அனுபவங்கள் துரோகத்தின் பதிவுகள்
துரோகத்தின் தூண்டலால்
துவண்டு போன இனமே - தமிழினமே,
சலனமின்றி எழுந்திடு துரோகத்தினை ஒழித்திடு.
சரித்திரநாயகர்கள் அவதரித்த சரித்திரபூமியே தமிழீழம் - நீ
சந்திக்காத துன்பங்கள் உலக சரித்திரத்தில் இல்லை.
விடுதலைக்காய் வித்தான தமிழினமே!
வீறி எழு உன் உரிமைகளை
வீரத்துடன் பெற்றுக்கொள்ள..
நினைவேறுகிறது…
மறுமொழிகள்