"யானைக் குட்டிகளைப் பிரித்தமைக்காக தலதா மாளிகைக்கு பலத்த கண்டனம்" என்ற செய்தியை 29.07.2009 அன்று மாலை 6 மணி 6 நிமிடங்கள் ஆகும் போது படித்தேன். படிக்கும்போது என்னை அறியாமலே என் வயிறு எரிந்தது. நெஞ்செல்லாம் வெடிப்பது போன்ற ஒரு உணர்வு என்னை மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கி அழுவதையும் எழுதுவதையும் தவிர வேறு எதனையும் செய்ய முடியாமல் இருக்கும் ஈழத்தில் பிறந்த ஒரு கோழை நான்.
என் இனம், என் உறவுகள், யார் உறவு என்று தெரியாது யார் இருக்கிறார்கள் என்று தெரியாது அவர்கள் இருக்கிறார்களா? எங்கே! என்று ஏங்கும் விதத்திலும் சிங்கள பிசாசுகளின் குண்டு தாக்குதலால் உருவான மனக்காயத்துக்கும் உடல் காயத்துக்கும் மருந்து கிடைக்காமலும், பால்குடிக்கும் குழந்தை ஒரு முகாமிலும் தாய் ஒரு முகாமிலும் தந்தை ஒரு முகாமிலுமாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். எமது உரிமைக்காகவும் உயிருக்காகவும் களத்தில் நின்ற உடன் பிறப்புக்கள் பிரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
சிறு குழந்தைகள் போசாக்கின்மையால் இறந்திருக்கிறார்கள். இறந்த தாயின் மார்பில் பிள்ளை பால் குடித்தபடி படுத்திருக்கிறது. உடுக்க உடையில்லாமல் உண்ண உணவிற்கு நீண்ட வரிசையில் நின்றும் கிடைக்காமல் வயிறு ஒட்டிப்போய் காத்திருக்கும் முதியவர்கள் என்று இலங்கை நாட்டில் எம் இனம் படும் துன்பங்களை என்னால் எழுத்து வடிவில் எழுதினாலும் யாருக்கும் அந்த வலியை உண்மையில் அனுபவிக்கமுடியாது. ஏன்! உணரக்கூட முடியாது. சொல்லெணாத்துயரத்தால் எம் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த அழிவை பார்த்து தினம் தினம் செத்து பிழைத்துக்கொண்டிருக்கிறோம் காலத்தால் புலம்பெயர்ந்த உறவுகள்.
இலங்கை ஒரு இறையாண்மை உள்ள நாடாக இருந்தால், தலதா மாளிகை ஒரு புத்தரின் புனித தலமாக இருந்தால் எம் இனம் அழியும் போது சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அது ஏன்? தற்போது அடிப்படை உரிமை மீறல் மனு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும்போது குரல் கொடுத்து அந்த மக்களை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்து எம் உறவுகளை குடும்பத்துடன் உறவுகளுடன் வாழ
அனுமதி தந்திருக்கவேண்டும். நாட்டிலுள்ள மக்கள் அதாவது உலகத்தால் கூட மனிதர்களாக மதிக்கப்படாத மனித இனம் இன்று உறவுகளை விட்டு பிரிந்து சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்த மக்களை காப்பாற்றாமல் தினமும் ஒட்டுக்குழுக்களாலும் இராணுவத்தினர் புலனாய்வுத்துறையினர் என பலரினாலும் துன்புறுத்தப்படும் மக்களூக்காக இதுவரைக்கும் ஒரு கண்டனக்குரலைக்கூட கொடுக்காதது ஏன்?...
அந்த யானைக்குட்டிகளுக்குள்ள உரிமை சுதந்திரம் என்பவற்றை கூட எம் தமிழினத்துக்கு இலங்கை அரசாங்கம் தராதது ஏன்? இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த யானைக்குட்டி தலதாமாளிகைக்கு நான் தான் சொந்தக்காரன் என்று கூறுமாக இருந்தால் அந்த
யானைக்குட்டி இறந்ததிற்கான சான்றே இல்லாமல் செய்வதற்கும் அந்த யானைக்குட்டிக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி கொலை செய்வதற்கும் இலங்கை நாட்டில் சட்டம் இயற்றப்படும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும் என்பதை யானைக்குட்டி அறியுமோ இல்லையோ பாதிக்கப்பட்ட எம் இனம் தெளிவாக புரிந்து கொள்ளும்.
எனது கருத்து என்னவெனில், அதிகாரபகிர்வு என்றும் இலங்கை ஒரு நாடு என்றும் கூறும் நாடுகளையும் சர்வதேசத்தையும் நான் கேட்பது யானைக்குட்டிக்கு கிடைக்கிற உரிமை கூட மனித இனத்துக்கு கிடைக்காத நாட்டின் சட்டத்தின் கீழ் எப்படி ஒரு தமிழினம் வாழமுடியும்?...
அறவழியில் கேட்டோம் அடாவடி செய்தீர்கள். ஆயுதத்தால் கேட்டோம் தீவிரவாதி என்கிறீர்கள்..இனி நாம் எப்படி உங்களிடம் எமது சுயநிர்ணய உரிமையை கேட்க முடியும்?.. தீவிரவாதம் என்றால் என்ன? என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு உணர்த்தினால் தான் எமது உரிமையை எமக்கு தருவீர்களா? அதற்கு தான் காத்திருக்கிறீர்கள் என்றால் அதையும் செய்து பார்ப்போம்.. எம் இனம் பட்ட துன்பத்தை போல சிங்கள இனமும் படவேண்டும். தாய் தந்தை உறவுகளை பிரிந்து தத்தளிக்கவேண்டும். அப்போது தான் எமக்கு கிடைக்கும் எமது சுதந்திர தாகம். சாதி மதபேதமற்ற தமீழீழ உறவுகளாக தமிழினமாக ஒன்று பட்டு எமது விடுதலையை வென்றெடுப்போம்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்