Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

இந்தியாவின் சுதந்திர தினம்

இறையாண்மைக்காக எம் மக்களை அழித்த இந்தியா


பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விலகி 1947ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் நாள் இந்தியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நாளை இந்தியாவில் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அந்த உரையில் கடந்த ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும் வரும் ஆண்டுக்கான குறிக்கோளையும் நாட்டு மக்களுக்கு கூறுவார்.

உண்மையில் இந்திய மக்களிடம் காணப்படும் ஒற்றுமை உணர்வை நான் மதிக்கிறேன். என்னதான் சண்டை போட்டாலும் இந்தியன் என்பதில் அவர்கள் பெருமை கொள்கிறார்கள். அந்த மனப்பக்குவத்தை என்றும் போற்ற வேண்டும். இதில் என் அனுபவத்தை கூறுகிறேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு ஓட்டுனருக்கான உரிமம் பெறுவதற்காக பாதுகாப்பு காவல்துறைக்கு ஓட்டிக்காட்டுவதற்கான இடத்திற்கு போயிருந்தேன். அங்கு ஓட்டிக்காட்டியவுடன் உரிமம் பெறும் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு போக சொன்னார்கள். அந்த அலுவலகத்திற்கு பன்னிரண்டு மணியளவில் போக சொன்னார்கள். பரீட்சை ஒன்பது மணி முப்பது நிமிடங்கள் அளவில் முடிந்தது. சொந்த வாகனங்கள் வைத்திருந்தவர்கள் போக மீதமுள்ளவர்கள் என்னத்தில் போவம் என்று பேசி பேருந்தில் என்று முடிவெடுத்த பின்னர் பேருந்தில் போய் அங்கு இறங்கி நின்றோம். நிறைய நேரம் இருந்தது அதே நேரம் எல்லோரும் காலையில் எட்டு மணிக்கு வந்ததால் காலை உணவு சாப்பிடவில்லை. அதை சாப்பிட கடைக்கு போவோம் என்றார்கள். அதில் என்னுடன் சேர்த்து ஐந்து பேர் இருந்தோம். ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பவர். இன்னொருவர் அமெரிக்காவுக்கு படிக்க போறதற்காக இருக்கிறார். இவர்கள் இருவரும் ஆண்கள். பெண்களில் ஒருவர் ஐ.ரியில் வேலை செய்கிறார். இன்னொருவர் குடும்ப பெண்ணாக இருக்கிறார். முன் பின் தெரியாத இவர்கள் பழகிய விதம் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உதவிகள் செய்தார்கள் அதை விட நன்றாக பழகினார்கள். அந்த சந்தர்ப்பம் வாய்த்ததையிட்டு நான் மிகவும் பெருமை கொள்வதோடு இந்திய உறவுகளின் தன்மையையும் பாராட்டுகிறேன்.

நான் ஈழத்தில் சாதரண குடும்பத்தில் பிறந்தனான் தான் ஆனாலும் இந்தளவிற்கு எல்லாருடனும் பழகமாட்டேன். அது தான் என்னவோ அவர்கள் பழகிய விதம் என்னை நெகிழ வைத்தது. அதற்காக நான் யாருடனும் பழகாத சடப்பொருள் கிடையாது. உடனே யாரோடும் பழகுவதில் கொஞ்சம் தயக்கம் தான். நாள் போக போக எளிமையாக பழகுவேன். இந்திய மக்களின் எல்லோருடனும் பழகும் பண்பு எனக்கு பிடித்திருக்கிறது. ஆனாலும், பிடிக்காததும் உண்டு. அதாவது ஏழை மக்களை சுரண்டி இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழ் தள்ளிவிட்டு வசதி வாய்ப்புக்களுடன் வாழும் அதிகாரவர்க்க மக்களையும் எதை செய்யும் போதும் தனக்கு இலாபம் இருக்கிறதா என்றூ பார்த்து செய்யும் சில உறவு முறைமைகளையும் அத்தோடு சில சமுதாய சீர்கேடுகளான மாமி மருமகள் சண்டை, கள்ளக்காதல் போன்றனவும் என்னை மிகவும் பாதிப்பதுடன் பிடிக்கவும் இல்லை.

சில வேளைகளில் ஈழத்தில் பிறந்ததால் நான் பெருமைப்படுகிறேன். எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தம், அதானால் ஏற்பட்ட இழப்புக்கள், துன்பங்கள் என்பவற்றுக்கு அப்பால் எம் ஈழத்து உறவுகள் இன்று புலம்பெயர்ந்து எட்டு திக்கிலும் வசித்து வந்தாலும் தன் உறவுக்கு துன்பம் வரும்போது பலனை எதிர்பாராது உதவும் அந்த உறவு முறை எனக்கு மிகவும் பிடித்தது. இன்று எம் மக்கள் மீது இரசாயனக்குண்டுகளுடன் இராணுவ உதவிகளையும் செய்து எம்மினத்தின் பெரும்பகுதியை அழித்து சில பகுதியை முற்கம்பி சிறைக்குள் வாட வழியமைத்து கொடுத்தது இந்த இந்திய காட்டுமிராண்டி அரசு தான். அவ்வாறு முற்கம்பி வேலிக்குள் சாப்பாடு இல்லாமல் உறவுகள் வாடுவதை பார்த்து என் சொந்தம் எது என்று கேட்டு புலம்பெயர் உறவுகள் உதவுவதில்லை. எல்லாம் எம் மக்கள் என்று எல்லோருக்கும் உதவும் நிலைக்கு எம்மக்கள் தள்ளப்பட்டாலும் புறக்கணிக்காது எம் உறவுகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை சிறை காவலர்களுக்கு தெரியாது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படியான பெருந்தன்மை படைத்த தமிழினம் வாழ்ந்த தேசம் தமிழீழம்.

நாளை இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் கடந்த ஆண்டு செய்த சாதனைகளை பட்டியலிடும்போது பயங்கரவாதிகளை அழித்தோம் எனும் போர்வையில் தமிழீழ மக்களை அழித்த அந்த 20,000 ஆயிரம் மக்களை அழித்த சாதனை அந்த சாதனையின் இரத்த கறைபடிந்த கையுடனேயே இந்திய தேசியக்கொடியை செங்கோட்டையில் ஏத்தப்போகிறார் ஏத்துவார் என்பதை ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் கருத்தில் கொள்ளவேண்டிய உண்மை. இந்தியாவில் இருந்து தமிழ் நாடு பிரிவதால் ஏற்படும் இந்திய இறையாண்மையை பாதுகாப்பதற்காக எம் இனம் இன்று புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆசிய வல்லரசுகளின் போட்டியால் ஒரு இனம் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட ஆண்டு இது. இந்த ஆண்டு 2009ம் ஆண்டு இந்திய தேசியக்கொடி தமிழீழ மக்களின் இரத்ததிலும் கண்ணீரிலும் மூழ்கடிக்கப்பட்டு தமிழீழ மக்களின் புதைகுழிகளின் மீது ஏற்றப்படும் ஒரு மரண சான்று கொடியாகவே நான் கருதுகிறேன்.

குறிச்சொற்கள்:
கைதுறப்பு