Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

என் கையே என்னை கொல்ல

பரிதவித்து நிற்கிறது தமிழினம்






தன்மானத்துடன் வாழத்துடித்த எம் உறவுகள்
மானமிழந்து நிர்வாணமாக இறக்க
பார்வையாளர்களாக உலகம் பார்த்து ரசிக்க
பரிதவித்து நிற்கிறது தமிழினம்...

யார் தான் எமக்குளர்!...
யாரிடம் போய் சொல்வோம் எம் சோகத்தை!..
எம் குறையை நிவர்த்தி செய்த பாதுகாவலர்களும்
பாதை தனை சொல்லாது மௌனமாக....

உள்ளமெல்லாம் கருகி
உடலமெல்லாம் செருப்படி பட்டு
கைகளிரண்டும் கட்டுண்டு
வரிசையில் காத்திருக்க
ஒவ்வொன்றாக பிடித்துவந்து
பின்னால் நின்று சுடுகிறான்.. யாரை?..
எம் உறவுகளை...

காட்சி தனை பார்க்கும்போது
உள்ளம் படபடக்க
கண்களிரண்டும் நீர் சொரிய
செய்வதறியா மெய்சிலிர்க்க
பரதேசி கூட்டமதை
சாகடிக்க தோணுகிறது.. கேடு கெட்ட
சிங்களவன் புறமுதுகில்
கைகளை கட்டி சுடுகிறானே!
இதில் தெரிகிறது....
இது பரதேசி கூட்டமென்று.

அடிமைகளாக இருக்க மறுத்ததால்
சிங்களவன் சப்பாத்தின் அடி உதை..
உரிமைகளை தரும்படி கேட்டதால்
இறந்த எம் வேங்கைகளின் உடலகள்
இராணுவ பிசாசுகளுக்கு காமப்பசி தீர்த்தன.

எத்தனை துன்பங்கள்!.. என்னென்ன துன்பங்கள்!..
துன்பத்தின் வகைகளை அறிய விருப்புவோர்
ஈழத்து உறவுகளிடம் கேளுங்கள்..
உலகமறியா மனிதர்களறியா ஏன்?..
மிருகங்கள் கூட அறியாத புதுவித துன்பங்கள்
எம்மை மட்டும் தொடருவதேன்?...

கருத்தில் ஒன்றிணையாமல் நீ பெரிது நான் பெரிதென்று
வீறாப்பு கொண்டெழுந்து செய்த காரியம் தான் என்ன?
இனவெறியன் சிங்களவனுடன் சேர்ந்து நம் இனத்தை
நாம் அழித்தது தானா!..
என் கையே என்னை கொல்ல
என் கண்கள் அழுவதை தவிர வேறென்ன செய்யும்!..h4>

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: என் கையே என்னை கொல்ல
மனதை உருக்கும் இந்த வரிகளை படிக்கும் பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இக்கண்ணீர் எம் மக்களுக்கு காணிக்கை ஆகட்டும்.
Re: என் கையே என்னை கொல்ல
ennal kathamutiyavillai. kathari thutikkum en manathil kozlaiyaka nirkkiren.en peyaril paathi peyaram muthukumar
Re: என் கையே என்னை கொல்ல
migavum arumai
கைதுறப்பு