உணர்வு ஊற்றெடுக்க
உரம் ஊட்டிய அண்ணா
திலீபனே!,
காந்தீய தேசத்திற்கு அகிம்சையை
கற்பித்த ஆசானே!
வாக்குறுதி தனை நிறைவேற்றாது
வஞ்சனை செய்வது கண்டு - முருகன்
வாசலிலே நா வறண்டு,
பன்னிரண்டு நாட்கள்
பாரையே திசை திருப்பி - உங்கள் ஆசை அண்ணன்
தமிழீழ தலைவரின் வார்த்தை தனையே நிராகரித்து
தமிழீழ கனவை விதைத்தீர்கள்.
தமிழீழ நிலப்பரப்பில் மலர்தூவி வாழ்த்திய
தமிழின கரங்கள் இன்று
தயக்கத்துடன் அழுகின்றது - அண்ணா
தீலிபனே உங்கள் தியாக நாளை எண்ணி
சரஸ்வதி பூசை,சரஸ்வதி பூஜை,விஜய தசமி,எடு தொடக்குதல்
அகிம்சையின் வழியில் சுதந்திரம் பெற்ற
அகிம்சையறியா நாடு இந்தியா என்று
அன்றே எமக்கு அறிவூட்டினீர்கள்
அறியவில்லை எம் துரோகிகள் உண்மைதனை.
தமிழீழ தேசமே கண்ணீர் சிந்தியும் - உங்கள்
தமிழீழ கொள்கையை மூச்சாக சுவாசித்து
தமிழீழ மக்களுக்கு துயரத்தோடு வீரத்தையும்
தருவித்த உன்னத ஆண்டு 1987.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாதி மாதம்
பாடசாலை முதல் கோயில்கள் வரை - அண்ணா
உங்களின் படங்கள் வைத்து மாலை அணிவித்து
மலர்கள் தூவி வணங்கி சென்ற நாட்கள்....
இன்று இன்னொரு நாட்டு அடிமைகளாய்
உங்களுக்கு மலர் தூவ கைகளற்றவர்களாய்
மாலை கட்ட மலர்களற்றவர்களாய்
குரங்கின் கைகளில் பூமாலை போல
மாற்றான் கைகளில் நாங்கள்.
உணர்ச்சி பொங்க கவி வடித்து
உள்ளம் மகிழ தமிழன் வீர உரை நிகழ்த்தி
கனவு வளர கலை நிகழ்ச்சி செய்து - உங்கள்
தியாக நாளை கொண்டாடிய தமிழீழ தேசம்...
சாம்பல் படர்ந்த பாலைவனச்சோலையாய்
கருகிய உடலங்கள் கொண்ட சுடலையாய்
சிங்கள வெறியனின் பசிக்கு உணவாக...
தமிழீழ கரு உருவாக்கிவிட்டதால்
கருவுற்ற குழந்தை பிறப்பது உறுதி
திலீபன் மருத்துவமனை தொடங்கி
மருத்துவ மாணவனாம் உங்கள்
மருத்துவ கனவை நிறைவு செய்தார் - உங்கள்
அண்ணா எங்கள் தலைவர்.
மக்களுக்கு சேவை செய்யும் - உங்கள்
மருத்துவ கனவையே நிறைவு செய்த
எம் தலைவர் மக்கள் உரிமையுடன்
வாழ ஆசை கொண்ட - உங்கள்
தமிழீழ கனவையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்