Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

பிளவுபடும் ஆதரவாளர்கள்

வேதனையில் தமிழீழ மக்கள்


மனதை வருத்துகின்ற புண்ணில் அம்பு குத்துவதைப்போன்ற வேதனைகள் தமிழர்களின் மனதில் சமீபகாலமாக நடந்து வருகிறது. யாவரும் அறிந்தது ஆனாலும் எனது ஆதங்கத்தை கருத்துரைகளாக தெரிவித்தாலும் அதை பிரசுரிக்க குறித்த ஊடகங்கள் தவறுவதால் என் வலைத்தளமூடாக வெளிக்கொண்டுவருகின்றேன்.

நக்கீரனில் ஈழத்து நிலையை தொடர் கதையாக எழுதி வரும் பாதர் ஜெகத்கஸ்பர் அவர்களை எல்லோருக்கும் தெரியும். மே மாதத்தில் அரிய சில செய்திகளை வெளியிட்டதால் பிரபலமடைந்த அதிர்வு இணையத்தளத்தையும் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியும். ஆனால் அதை நடத்துபவர் கண்ணன் என்ற பெயர் உடையவர் என்பது பலருக்கு தெரியாது. கண்ணன் என்பவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர் என்பது அவரின் வலைத்தளத்தில் வரும் செய்திகளையும் கட்டுரைகளையும் வைத்து நாம் அறிவோம். அதைவிட எனக்கு தெரிந்து கண்ணன் என்பவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான ஒரு வர் என்பதை தெரிந்தவர்கள் மூலம் அறிந்துள்ளேன்.

இதில் என்ன என்றால் நக்கீரன் இதழும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரிக்கும் ஒரு இதழ். அதிர்வும் தமிழீழ மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் ஒரு வலைத்தளம். தமிழீழ மக்களாகிய நமக்கு தேவை தமிழீழம். அதற்கு உங்கள் இருவரின் ஒத்துழைப்பும் வேண்டும். சமீபத்தில் அதிர்வில் பாதர் ஜெகத் கஸ்பர் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் பாதர் ஜெகத் கஸ்பர் அவர்கள் எழுதியிருந்த அந்த யாழ்ப்பாணத்து அம்மணியின் பேட்டியைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். உண்மையில் அது தமீழத்தில் இருந்து வந்த குரலா என்று! அதைவிட அதற்கு ஒரு கருத்துரையும் போட்டிருந்தேன் நக்கீரன் அதை பிரசுரிக்கவில்லை. அந்த யாழ்ப்பாணத்து பெண்மணியை எங்களுக்கு அடையாளம் காட்டமுடியுமா? என்று. அதே போன்று ப.சிதம்பரம் அவர்களை புகழ்ந்து பேசும் ஜெகத் கஸ்பர் பாதர் அவர்களின் அந்த கட்டுரைக்கு பிறகு எனக்கு அவர் மேல் ஒரு சந்தேகம், "ஏன் பாதர் இப்படி எழுதுகிறார்?" என்று.

அதுபோலவே அதிர்வு இணையத்தளத்திலும் சமீபகாலமாக வெளிவந்த கட்டுரையும் திசைமாறியது. அதற்கும் நான் கருத்துரை வழங்கியிருந்தேன். அதை அதிர்வு இணையத்தளம் பிரசுரிக்கவில்லை. அத்துடன் மனிதன் என்ற பெயருடையவர் ஒருவரிடமிருந்து எல்லாரினதும் வண்டவாளாங்கள் எமக்கு தெரியும் நீர் சொல்லத்தேவையில்லை என்ற பொருட்பட ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்திருந்தது. அந்த கருத்துரையில் நான் எழுதியது மனிதர்கள் தவறு செய்வது வழக்கம். அதற்காக ஒருவரை குறை சொல்லி உங்கள் இணையத்தில் செய்தி வெளியிடாதீர்கள் என்பதே.

குறிப்பாக நான் குறிப்பிட்டது பரமேஸ்வரன் அண்ணாவின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டது தவறு. பிரித்தானியாவின் வலைத்தளத்தில் இருந்தது என்றால் இவ்வாறு பிரித்தானிவின் வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதை நாம் பரமேஸ்வரனிடம் கேட்டு உறுது செய்து மக்களுக்கு தெரிவிக்கிறோம் என்று தான் அதிர்வு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கவேண்டும். அதையே தமிழீழ மக்களும் ஏற்றிருப்பார்கள். அதே போல் நக்கீரன் இதழினூடாக எம் விடுதலைப்போராட்டத்தின் அரிய நிகழ்வுகளை குறிப்பாக எம் தலைவரின் குணாதிசயங்களை அறிந்த தமிழ் நாட்டு மக்கள் ஏராளம். அதற்கு உதாரணமும் குறிப்பிட்டிருந்தேன் பொதுவாக தமிழ்நாட்டு மக்களின் அபிப்பிராயம் தலைவர் ஒரு கொடுமைக்காரன் பயங்கரவாதி. எமது பிரதமரை கொன்றவர் என்று. அதையே என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள் "பிரபாகரன் பயங்கரவாதி என்றெல்லாம் சொன்னாங்க ஆனால் நக்கீரனில் வாறதை பார்த்தால் அவர் நல்லவரா இருக்காரு" என்றும் "அப்ப எதற்கு எங்க பிரதமர கொண்றாரு" என்றெல்லாம் கேட்டார்கள்.

அதற்கு நான் அளித்த பதில் " தலைவர் உங்கள் பிரதமரை கொன்றார் என்பது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ராஜீவ் காந்தியின் அமைதிப்படை எனும் பெயரில் தமிழீழம் வந்த இந்திய இராணுவத்தினர் செய்ததாக என் பெற்றோர் சொல்லி தந்த ஒரு இளைஞனின் மலவாசலிற்குள் முற்கம்பியை விட்டு நீ புலியா? என்று கேள்வி கேட்டு கேட்டு கம்பியை உள்ளே விடுவது வெளியிலே எடுப்பதுமாக அவர்கள் சித்திரவதைகள் ஏராளம் சொன்னார்கள்" அதை அவர்களிடம் நானும் சொன்னேன்.

எனவே அதிர்வுக்கு நான் எழுதிய கருத்துரை தான் இது. இப்படி தமிழீழபோராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நபர்களை குறைகூறி செய்தி வெளியிடாதீர்கள். எதோ ஒரு வகையில் எமக்கு உதவுபவர்களை நாம் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர வெறுக்க கூடாது என்று எழுதியிருந்தேன்.

இதெல்லாம் முடிந்து அதிர்வு இணையத்தில் அதிக கோபம் இருந்தது பரமேஸ்வரன் அண்ணாவை கொச்சைப்படுத்தியது. அப்புறம் அவர்கள் மன்னிப்பு கேட்டிருந்தார்கள். அத்துடன் அதனை மறந்துவிட்டேன் இன்று நக்கீரன் பார்க்கும் போது மீண்டும் பழையதுகள் புரளுகின்றன.

இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதெல்லாம் தமிழீழ மக்களுக்கு கண்டிப்பாக தேவைப்படாது. ஏனெனில் மனிதர்கள் பலவிதம். எமக்கு இவர்களை எப்படி தெரியும் எமது தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்கு இவர்கள் இருவரும் ஆதரவு அளிப்பவர்கள் என்றே. எனவே இன்று நக்கீரனை பார்த்தவுடன் என் மனதில் உதித்த கருத்து என்னவென்றால் இருவரும் ஆளாளுக்கு விலைபோவதாக கூறுவதிலிருந்து எமது மக்களுக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் ஆதரவான இருவரை சிங்கள இனவெறியர்கள் தமது சதியால் பிரிக்க முற்படுகிறார்கள் என்பதே என் சிந்தனைக்கு எட்டியது. தமிழர்களான எமது பலவீனத்தை அறிந்த சிங்களம் எம்மினத்தை பிளவு படுத்த பலமுறை கையாண்ட வழிமுறையையே இம்முறையும் கையாளுகிறது.

எனவே, இது தனிமனிதர் பிரச்சனை கிடையாது. ஒரு இனம் சார்ந்த பிரச்சனை. எம்மினம் அழிந்து கொண்டிருக்கிறது. அதை புத்துயிர் ஊட்டவேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களைப் போன்ற பெரியவர்களிடமே தற்பொழுதுள்ளது. எனவே, கருத்து வேற்றுமைகளால் உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொருவர் பற்றிய உண்மைகளை தயவு செய்து வெளிக்கொண்டு வராதீர்கள். இதனால் பாதிக்கப்போவது எம்மினம் என்பதை மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள். தமிழீழ மக்களின் மனங்கள் புண்களாகவே தற்பொழுது இருக்கிறது. அதில் ஆதரவாளர்களான நீங்கள் அம்பு விடாதீர்கள். நிச்சயம் அதை அவர்களால் தாங்கமுடியாது.

குறிச்சொற்கள்:
கைதுறப்பு